search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைப்பு பணிகள்"

    • நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.
    • சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் ரெயில்கள் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டது.

    இந்த மழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.

    இதனால் செய்துங்க நல்லூர் ரெயில் நிலையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடத்திலும், தாதன்குளம் பகுதியில் ஒரு இடத்திலும், ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் வரை யிலான ரெயில்வே தண்ட வாளம் பகுதியில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே தண்டவாளம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.

    ரெயில்வே அதிகாரிகள் செய்துங்கநல்லூர், தாதன் குளம் மற்றும் ஆழ்வார்திரு நகரி பகுதிகளில் இரவு பகலாக ரெயில்வே தண்ட வாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் ரெயில்வே தண்டவாளம் சேதமடைந்த காரணத்தினால் நெல்லை-திருச்செந்தூர் வரையிலான அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் நாளை (31-ந்தேதி) வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் ரெயில்கள் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 5-ந்தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா.
    • தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி இருந்த விசைப்படையில், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா. இவருக்கு சொந்தமான விசைப்படகு, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள்நடைபெற்று வந்தது. அப்போது படத்தின் கீழ் புறத்தில் வெல்டிங்க் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீ மற்ற பகுதி மற்றும் மற்ற படங்களுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் .ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    • பிளாட்பாரங்களின் மேல் கூரைகளின் தரை ஓடுகள் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கும் பணி நடக்கிறது‌
    • ஆம்னி பஸ் நிலையம் ரூ. 2 கோடி செலவிலும் சீரமைக்கப் பட்டு வருகிறது

    நாகர்கோவில், மே.3-

    நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ்நிலையங்கள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    தற்பொழுது வடசேரி பஸ் நிலையத்தில் பிளாட்பாரங்களின் மேல் கூரைகளின் தரை ஓடுகள் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கும் பணி நடக்கிறது. பழைய தரை ஒடுகள் தற்பொழுது அகற்றப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    மழையின் காரணமாக அந்த மேல் கூரையிலிருந்து தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால் பயணிகள் அதில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து மேயர் மகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை மேயர் மகேஷ் வடசேரி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேல் கூரையில் இருந்து தண்ணீர் கசிவை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் ரூ. 2 கோடி செலவிலும், ஆம்னி பஸ் நிலையம் ரூ. 2 கோடி செலவிலும் சீரமைக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வடசேரி பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.தரைதளங்கள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து பிளாட்பாரத்தின் மேல் கூரையில் உள்ள தரைஒடுகள் அகற்றப்பட்டு புதிய ஒடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தரைஒடுகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.மேலும் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலிருந்து நாகராஜா கோவில் செல்லும் சாலையில் மழை நீர் தேங்குவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதை உடனடியாக சீரமைப்பது தொடர்பாக அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், மண்டல தலைவர் ஜவகர்,ஒன்றிய செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரை வைகை ஆற்றில் சீரமைப்பு பணிகள் நடைபெறும்.
    • இந்த தகவலை நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் மன்றக்கூட்டம் தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    10-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி கடந்த ஒரு ஆண்டாக நகராட்சி நிர்வாகம் தனது வார்டில் வளர்ச்சி பணிகளை செய்யாமல் புறக்கணிப்பதாக புகார் கூறும் வாசகங்கள் கொண்ட பதாகையை ஏந்தி வாயில் கருப்புதுணி கட்டி வந்து கூட்டரங்கில் தரையில் அமர்ந்து மவுனமாக இருந்தார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கவுன்சி லர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. பெரும்பா லான கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் குடிநீர், கழிவுநீர், வடிகால் சாலை, தெருவிளக்கு அமைத்தல், பராமரித்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியு றுத்தினர். கவுன்சிலர் சண்முகப்பிரியா பேசுகையில், ஆனந்த வல்லி சோமநாதர் சுவாமி கோவிலை சுற்றி தேரோடும் வீதிகளில் அதிகரித்து வரும் இறைச்சி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    மேலும் வீதிகளில் பழுதடையும் தெருவிளக்குகளை சரி செய்ய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தலைவர் மாரியப்பன் கென்னடி பேசியதாவது:-

    மானாமதுரை நகராட்சியில் கடந்த ஓராண்டில் ரூ.7கோடி மதிப்பில் பொதுமக்களுக்கான வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் வீதிகளை சுத்தம் செய்வதில் ஏற்பட்டிருந்த தொய்வு தற்போது படிப்படியாக குறைந்து துப்புரவு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    வரும் காலங்களில் துப்புரவுப்பணி இன்னும் சிறப்பாக நடைபெறும். அனைத்து வீதிகளிலும் புதிய தெருவிளக்குகள் அமைத்து பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    மானாமதுரையில் விரைவில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. இதற்காக ரூ.5லட்சம் மதிப்பீட்டில் திருவிழாவிற்காக பொதுமக்கள் கூடும் நகர் பகுதி, வைகை ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வியாபாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நகராட்சியில் தொழில் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. எந்த வார்டும் புறக்கணிக்கவில்லை. தர்ணாவில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க. உறுப்பினரின் வார்டில் திட்டப்பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழையால் சேதமடைந்த பகுதிகளில் உடனடியாக சீரமைப்பு பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • சிறு பாலத்தை பெரிய பாலமாக கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    தமிழகத்தில் தற்போது பருவமழையின் காரணமாக, ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் ஆகியவைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள் ஆகியவைகளில் அதிகளவில் நீர்வரத்து காணப்படுகிறது.

    மழைகாலங்களில் பெறப்படும் நீரை முறையாக சேமிப்பதற்கு ஏதுவாக, வரத்து வாய்கால்கள் சீரமைக்கப்பட்டு, தடை யின்றி கண்மாய்கள் மற்றும் ஊரணிகளுக்கு நீர் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகளிலும் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    குறிப்பாக, பேரிடா் காலங்களில் எதிர்பா ராதவிதமாக ஏற்படும் விளைவுகளை எதிர்கொ ள்வதற்கு ஏதுவாக, மீட்புப்பணிகளுக்கான தன்னார்வலா்கள் மற்றும் மணல் மூட்டைகள், ஜே.சி.பி. எந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன.

    தற்போது பெய்து வரும் மழையால் திருப்பத்தூர் உட்கோ ட்டத்தைச் சோ்ந்த செவ்வூர் - கண்டவராயன்பட்டி சாலையில் உள்ள சிறு பாலம் சேதமடைந்து உள்ளது. இதை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டியுடன் பார்வையிட்டு சேதமடைந்த சிறு பாலத்தை பெரிய பாலமாக கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், ஊரக வளா்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடா்ந்து, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், அ.வேலங்குடி ஊராட்சியிலுள்ள கருப்பா் கோவில் பகுதியிலுள்ள ஊரணி மழையின் காரணமாக, நிரம்பி, ஊரணியின் சுற்று ச்சுவா் இடிந்து பழுது ஏற்பட்டுள்ளது.

    அதனையும் தற்காலிமாக, மணல் மூட்டைகளை கொண்டு சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, சுற்றுச்சுவா் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்கும் அலுவலா்களுக்கு அமைச்சா் பெரியகருப்பன் அறிவுறுத்தினார்.

    • ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் கண்மாய்களில் சீரமைப்பு பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
    • பருவமழையால் கிடைக்கும் நீரை சேமிப்பதற்கு ஏதுவாக இந்த பணிகளை தரமான முறையில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை யூனியனுக்கு உட்பட்ட பாணபரன் மற்றும் படமாத்தூர் கண்மாய்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 யூனியன் பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வசதிகளும் மேம்படுத்துவது மட்டுமின்றி, நீர்வள ஆதாரங்களை சீரமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், வரத்துக்கால்வாய் சீரமைத்தல், சங்கன் பிட் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை யூனியனுக்கு உட்பட்ட 43 ஊராட்சிகளில் 88 தொகுப்புக்களில் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் தொடர்பாக சிவக ங்கை யூனியனுக்கு உட்பட்ட பில்லூர் ஊராட்சி, கரும்பாவூர் கிராமத்தில் ரூ.8.56 லட்சம் மதிப்பீட்டில் பாணபரன் கண்மாய் சங்கன் பிட் மற்றும் படமாத்தூர் கிராமத்தில் ரூ.7.67 லட்சம் மதிப்பீட்டில் படமாத்தூர் கண்மாய் சங்கன் பிட் ஆகியவைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    பருவமழையால் கிடைக்கும் நீரை சேமிப்பதற்கு ஏதுவாக இந்த பணிகளை தரமான முறையில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி கேட்டறிந்தார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) விசாலாட்சி, உதவிப்பொறியாளர்கள் கிருஷ்ணகுமாரி, தேவிசங்கர், சையது இப்ராகிம், ஒன்றியப்பணி மேற்பார்வையாளர் (ஓவர்சியர்) செந்தில்நாதன், சாலை ஆய்வாளர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதசுந்தரம், ஊராட்சி மன்றத்தலைவர்கள் சுமதி சரவணன் (பில்லூர்), மங்களம் (படமாத்தூர்) ஆகியோர் உடனிருந்தனர்.

    • காவிரி பாலத்தில் இரவு, பகலாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது
    • தேவைக்கு ஏற்ப கூடுதல் பணியாட்களை ஈடுபடுத்த முடிவு

    திருச்சி:

    திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் 45 ஆண்டு கால பழமையான சிந்தாமணி காவிரி பாலம் வலுவிழந்ததைத் தொடர்ந்து அப்பாலத்தை ரூ.7 கோடியில் பராமரிப்பு செய்து புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 10-ந்தேதி நள்ளிரவு பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 11-ந்தேதி காலை முதல் பணிகள் நடந்து வருகிறது. பாலததில் ஓரமாக இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    பணிகள் தொடங்கி 12 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்களில் கூறியதாவது :-

    இப்போது ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது. பாலத்தில் உள்ள ஒவ்வொரு இணைப்புகளுக்கும் இடையே புதிய ராடுகள் பொருத்த துளையிட்டு பழைய ராடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

    இதுபோன்று 32 இணைப்புகளில் பழைய ராடுகளை அகற்ற வேண்டும். தொடர்ந்து பாலத்திற்கு அடியில் உள்ள பேரிங்குகள் சீரமைத்து பொருத்தும் பணி உள்ளிட்ட அடுத்தடுத்த பணிகள் நடைபெறும்.

    இப்பணிகள் இரவு, பகல் என 24 மணி நேரமும் நடந்து வருகிறது. இப்போதைக்கு 50 நபர்கள் 2 ஷிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர். பணிகள் மற்றும் ேதவைகளுக்கேற்ப கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இப்பராமரிப்பு பணி நிறைவடைய 5 மாதங்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் முடிந்த வரை முன்னதாகவே பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணியின் போது இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் சிரமமாக இருந்தாலும், அவற்றை சமாளித்து தான் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றனர். 

    • தற்போது புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.
    • பி.என்.ரோடு வழியாக புஷ்பா ரவுண்டானா சந்திப்பு, ரெயில் நிலையம் வந்து ஊத்துக்குளி ரோடு வழியாக இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, திருவண்ணாமலைக்கு ஊத்துக்குளி மார்க்கமாக செல்லும் பஸ்கள் திருப்பூர் யுனிவர்செல் தியேட்டர் ரோட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.

    மாநகருக்குள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் யுனிவர்செல் தியேட்டர் ரோட்டில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இயக்கப்பட்ட பஸ்களை மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்குவதற்கான முன் னேற்பாடுகளை மேயர் தினேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து இன்று அதிகாலை முதல் சேலம், ஈரோடு, திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் திருப் பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பு பலகை யுனிவர்செல் தியேட்டர் ரோடு பகுதிகளில் வைக்கப்பட்டன.மேலும் யுனிவர்செல் தியேட்டர் ரோட்டில் இயங்கி வந்த தற்காலிக பஸ் நிலையம் இன்று முதல் செயல்படவில்லை.

    சேலம், ஈரோடு, திருவண்ணாமலை செல்லும் பஸ் கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பி.என்.ரோடு வழி யாக புஷ்பா ரவுண்டானா சந்திப்பு, ரெயில் நிலையம் வந்து ஊத்துக்குளி ரோடு வழியாக இயக்கப்படுகிறது. பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளு மாறு அரசு போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் கிளை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் இன்று முதல் நாள் என்பதால் சேலம், ஈரோடு செல்லும் பயணிகள் யுனிவர்சல் தற்காலிக பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு நின்ற போக்குவரத்து கழக அதிகாரிகள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுவது குறித்து தெரிவித்ததுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

    ×